சென்னை ராயப்பேட்டையில் உள்ள ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியிடம் நிர்வாகம் கூறியது.
அதற்கு அவர் அருண் குமார்,ரஞ்சித் குமார்,யுவராஜ்,அஜித் குமார்,ஸ்ரீநாத் ஆகிய ஐந்து பேரை சுத்தம் செய்ய அங்கு அனுப்பியுள்ளார். அப்போது, ரஞ்சித் குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவருடய அண்ணன் அருண் குமார் கழிவு நீர் தொட்டியின் கீழே இறங்கி மயக்கமடைந்த தம்பியை மீட்டார். பிறகு ரஞ்சித்தை காப்பாற்றச் சென்ற அருண்குமாரும் விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.