சென்னை: தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நஜூகான் (31). இவர், வீட்டு உரிமையாளருக்கு வீட்டு வாடகை கொடுக்காமல் மூன்று மாத காலமாக அலைக்கழித்து வந்துள்ளார். இதனால், வீட்டு உரிமையாளர் இளைஞரிடம் வீட்டு வாடகையை தரும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு உரிமையாளரின் 15 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையறிந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதற்குள் அந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.