சென்னை:தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், இவர்களுக்கான தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '8ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு அக்டோபர் 1ஆம் தேதி 12 வயது 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் செப்டம்பர் 12, 13 ஆகியத் தேதிகளில் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.