சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) காலை கேரளாவில் இருந்து சென்னை வந்தார். இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது திமுக மற்றும் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு கேட்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “சென்னையில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் மற்றொரு மாநில அரசு கவிழ்ந்தது மற்றும் சிவசேனாவின் கிளர்ச்சிப் பிரிவுக்கு பாஜக ஆதரவளிக்கப் போகிறது. இந்த ஆட்சி நீடிக்காது என்று தெரிந்தும் பாஜக தலைவர் முதலமைச்சராக விரும்பவில்லை. எனவே அவர்கள் தங்கள் பலிகடாவை கண்டுபிடித்தனர். மத்தியில் ஆளும் கட்சிக்கு இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மீது எந்த மரியாதையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.