தமிழ்நாடு

tamil nadu

தலைமை செயலகம் எதிரே தற்கொலைக்கு முயன்ற பெண்...!

By

Published : Mar 18, 2022, 8:42 AM IST

சென்னை தலைமைச் செயலகம் எதிரே பெட்ரோல் ஊற்றி பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman attempted suicide  suicide attempt  Chennai General Secretariat  Woman attempted suicide in front of Chennai General Secretariat  தற்கொலைக்கு முயன்ற பெண்  தலைமை செயலகம் எதிரே தற்கொலைக்கு முயன்ற பெண்  தற்கொலை முயற்சி
தற்கொலைக்கு முயன்ற பெண்

சென்னை: விருகம்பாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர்கள் கார்த்திக் - கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் அபகரித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி சென்னை தலைமைச் செயலகம் அருகே, கௌசல்யா பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினர், அவரை மீட்டு வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் அருகே பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details