தமிழ்நாடு

tamil nadu

பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

By

Published : Dec 10, 2019, 1:06 PM IST

சென்னை: திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Chennai Transgender money case
Chennai Transgender money case

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட வந்துள்ளார். இதைக் கண்ட காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்வேடமிட்ட இளைஞர்

அதில், கைது செய்யப்பட்ட இளைஞர் திருமுல்லைவாயல் அனுமன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் அவர் திருநங்கையாக மாறுவதற்கு தேவைப்படும் பணத்திற்காக பொதுமக்களிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், மணிகண்டனுக்கு இது போல் வேறு ஏதும் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'5 ஆண்டுகள்'... '4 மாநிலங்கள்' தொடர் கொள்ளை; ஆட்டோ ராணியை மடக்கிய சென்னை தனிப்படை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details