தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா? - அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும்

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிடாததால், விஜயதசமியன்று மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா என பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Etv Bharatவிஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா?
Etv Bharatவிஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா?

By

Published : Oct 3, 2022, 8:07 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று வெளியிட்டுவந்த பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

விஜயதசமி நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள சூழலில், இதுவரை அறிவிப்பு வெளியிடாததால், விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் உள்ளனர்.

தனியார் பள்ளிகள் விஜயதசமியன்று போட்டிபோட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை செய்யும் நிலையில், அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை, தமிழ்நாடு அரசு கைவிடுகிறதா என்றும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details