தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யார் தவறு செய்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: கூட்டுறவு தேர்தலில் யார் தவறு செய்தாலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

sellur raju
sellur raju

By

Published : Mar 9, 2020, 7:52 PM IST

சென்னை தி நகர் பகுதியில் உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு தானியங்கி பாஸ் புத்தகம் பதிவு இயந்திரத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பாஸ் புத்தகத்தை பதிவு செய்தார்.

பின்பு சிறு வணிக கடன், சுய உதவிக் குழு கடன், பணிபுரியும் மகளிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், புதிய கடன், நகைக் கடன், சிறு குறு மத்திய தொழில் கடன், என 2270 பயனாளிகளுக்கு சுமார் 10 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான கடன்களை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டுறவு தேர்தலில் யார் தவறு செய்தாலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை கூட்டுறவுத் துறை சார்பாக சுமார் 7 கோடியே 40 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 3 லட்சத்து 66 ஆயிரத்து 939 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஜூன் மாதம் முதல் அனைத்து இடங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை மக்கள் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் மக்கள் என அனைவரும் பொருட்களை எளிய முறையில் வாங்கிக்கொள்ள முடியும்" எனக் கூறினார்.

மேலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டில் விலையில்லா அரிசியும், வெளிமாநிலங்களில் விலை எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்ப அரிசி வழங்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:சவுடு மண் பயன்படுத்தி பாலம் கட்டுவதை நிறுத்த வேண்டும் - பொதுமக்கள் மனு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details