சென்னை:மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு சில நாட்கள் மழைபெய்தது. மே மாத தொடக்கத்தில் இருந்து சற்று வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. மே மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலையாக சென்னையில் 40.2 டிகிரி பாரன்ஹீட் நேற்றைய(மே23) தினம் பதிவு ஆகியுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க குளிர்பானக் கடையை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.