சென்னை:அரசு சார்ந்த நிகழ்வுகளின் செய்திகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பது, செய்தி குறிப்புகள் வெளியீடுவது என அரசு சார்ந்த செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கும் பணியை மக்கள் தொடர்பு அதிகாரிகள், அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.
அவர்கள் தகவல்களை பறிமாறிக்கொள்ள செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். சில நேரங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் போவதால் மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்குள் தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் தொடர்புகொள்ள இடையூறு இல்லாமல் சிக்னல் கிடைக்க வேண்டும் என்று தற்போது மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது.