இந்தியா அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணிவருகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளுடன் சிறந்த வர்த்தகப் போக்குவரத்தை நடத்திவருகிறது. அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முறை சாரா உச்சி மாநாடு நடந்தது.
இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை செய்தனர். இந்தியா - சீனா இடையே எல்லை மீறல் பிரச்னை நடந்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதேபோல ரஷ்யா - இந்தியா இடையே நல்லுறவு பல காலமாக நீடித்துவருகிறது. ரஷ்யாவானது இந்தியாவுக்கு பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்துவருகிறது. இந்நிலையில், மதுரையின் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மதுரை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.