தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் அனுப்பியிருக்க மாட்டோம்' - கண்கலங்கவைக்கும் காணொலி! - அவிநாசி பேருந்து விபத்து

திருப்பூர்-அவினாசி பேருந்து விபத்தில் உயிரிழந்த ஜோஃபி பால் என்பவரின் கண்கலங்கவைக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

-paul-avinasi-bus-accident
-paul-avinasi-bus-accident

By

Published : Feb 23, 2020, 6:39 PM IST

கடந்த 20ஆம் தேதி பெங்களூருவிலிருந்து கொச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கேரள அரசுப் பேருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோஃபி பாலும் ஒருவர்.

பயணச்சீட்டு விவரப் பட்டியல்

இவர், பெங்களூருவில் உள்ள ஜோய் ஆலுகாஸ் நகைக்கடையில் மேலாளராகப் பணியாற்றிவந்தவர். அதற்கு முன் அவர் மைசூரு கிளையில் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய அவரை பெங்களூரு கிளைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அவரின்கீழ் பணிபுரிந்த ஊழியர்கள், அவரைப் பிரிய மனமில்லாமல் கட்டியணைத்து, காலில் விழுந்து பிரியாவிடை அளித்துள்ளனர்.

பிரியாவிடை கொடுத்த காணொலி

அப்படி அவர் மீது தனிப்பாசமும், மரியாதையும் வைத்திருந்த அவ்வூழியர்கள், அவர் உயிரிழந்த செய்தி கேட்டு, 'இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் அவரை அனுப்பியிருக்க மாட்டோம்' என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். அவர், மைசூருவிலிருந்த பிரியாவிடை கொடுத்த காணொலி பதிவு தற்போது வெளியாகி பலராலும் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:கேரளா அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்து: லாரி ஓட்டுனர் கைது

ABOUT THE AUTHOR

...view details