சென்னை: ஐஐடி உதவிப்பேராசிரியர் விபின், அங்கு நிலவும் சாதியப் பாகுபாடு காரணமாகப் பணியில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருந்தார்.
மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தி, சாதியப் பாகுபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதுடன், சாதியப் பாகுபாட்டைத் தவிர்க்க அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
விபின் பணியிலிருந்து விலகியது தொடர்பாக விளக்கம் கேட்டதற்கு, ஐஐடி நிர்வாகம் விளக்கமளிக்க மறுத்துவிட்டது.