தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 16, 2022, 3:58 PM IST

ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம சுகாதார செவிலியர்கள் கைது

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுகாதார நிலைய செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம சுகாதார செவிலியர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம சுகாதார செவிலியர்கள் கைது

சென்னை:கிராம சுகாதார செவிலியர்களுக்கு 30 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராம சுகாதார செவிலியர்களின் முதல் கட்ட பதவி உயர்வை முழுமையாக அமல்படுத்த வேண்டியும், ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கும் ஒரு சமுதாய நல செவிலியர் பணி இடத்தை உருவாக்க வெளியிடப்பட்ட ஆணையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து சுகாதார தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம சுகாதார செவிலியர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். பின், அவர்களை சமுதாய நலக்கூடங்களில் வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details