தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியராக ஒன்றிணைவோம் - வெங்கையா நாயுடு அறைகூவல்! - மிருதங்கத்தின் இசைச் சிறப்பு

சென்னை: நம்முடைய பாரம்பரிய இசைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் நமது கடமை என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

பாரம்பரிய இசையை பாதுகாக்க வேண்டும்-வெங்கய்யா நாயுடு

By

Published : Nov 6, 2019, 12:22 PM IST

சென்னையில் நேற்று மிருதங்க வித்வான் உமையாள்புரம் கே. சிவராமன், ராமசாமி ஆகியோர் எழுதிய ‘மிருதங்கத்தின் இசைச் சிறப்பு’ என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, “இசைதான் எல்லாம். இசையால்தான் மனதிற்கு ஏற்ற நல்ல ஊட்டச்சத்தை கொடுக்க முடியும். மன அழுத்தத்திலிருந்து விடுபட இசையே அருமருந்தாகும். அப்படி நம்முடைய பாரம்பரிய இசைகளை வளர்ப்பதும், பாரமரிப்பதும்தான் நம்முடைய கடமை. அதில் ஒன்றான மிருதங்கம் ரம்மியமான இசையை தரக்கூடியது. மிருதங்கம் நமது கலாசாரம், சமயத்தினஅ ஒரு பகுதியாக உள்ளது” என்றார்.

பாரம்பரிய இசையை பாதுகாக்க வேண்டும்-வெங்கையா நாயுடு

மேலும், தமிழ்நாடு இல்லாமல் இந்தியா முழுமை பெறாது. தமிழர் என்பது பெருமைதான், ஆனாலும் இந்தியராகவும் பெருமை கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார். வெவ்வேறு மொழிகள் பேசினாலும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்தாலும் இந்தியராக ஒன்றிணைவோம் என்று அறைகூவல் விடுத்தார்.

இதையும் படிங்க...தமிழ்தான் மூத்த மொழி, இந்தி சின்ன மொழி- மதுரை எம்.பி. வெங்கடேசன்

ABOUT THE AUTHOR

...view details