தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை வகுக்க வேண்டும்' - Vice President venkaiah naidu says Give equal importance to family responsibilities and business responsibilities

வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை தொழிலாளர்கள் எளிதாகப் பராமரிக்கும் வகையில் மனிதவளக் கொள்கைகளை தொழில் துறைத் தலைவர்கள் வகுக்க வேண்டும். இது ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல்; சமூகத்தில் தற்போது அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவும் எனக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

venkaiah naidu
venkaiah naidu

By

Published : Dec 27, 2021, 7:32 PM IST

Updated : Dec 27, 2021, 7:59 PM IST

சென்னை :வேலை - வாழ்க்கை இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும் எனவும், ஒருவரின் தொழில் கடமைகளுக்கும், குடும்பப் பொறுப்புகளுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்ற வி.எல். இந்திரா தத் எழுதிய 'டாக்டர் வி.எல். தத்: ஒரு முன்னோடியின் வாழ்க்கைப் பயணத்தின் பார்வைகள்' என்ற ஆங்கில நூலை வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

உடல்நலத்துடன் மனநலமும்

அதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையைத் தொழிலாளர்கள் எளிதாகப் பராமரிக்கும் வகையில் மனிதவளக் கொள்கைகளை தொழில் துறைத் தலைவர்கள் வகுக்க வேண்டும்.

வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை வகுக்க வேண்டும்

இது ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல்; சமூகத்தில் தற்போது அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உதவும். அதிகளவிலான மன அழுத்தத்தை மக்கள் சந்திக்கும் வேலையில், உடல் நலத்துடன் மனநலமும் முக்கியத்துவம் பெறுகிறது. மன அழுத்தத்தைப் போக்க வெளியிடங்களுக்குச் சென்று மக்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

இந்தக் குணத்தைக் காண முடியவில்லை

குடும்ப வாழ்க்கைக்கும், தொழிலுக்குமான சமநிலையைத் தொழில் அதிபர் வி.எல். தத் சரியாகப் பராமரித்தார். இது அனைத்துத் தொழில் அதிபர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தத் அதிக முக்கியத்துவம் அளித்தார். தற்போதைய போட்டி தொழில் சூழலில் இந்தக் குணத்தைக் காண முடியவில்லை. தத்துக்கு அவரது தொழிலாளிகள் எப்போதும் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.

அவர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்தினார். இந்த நூலில் தனது கணவரின் நினைவுகள், அனுபவங்களை வி.எல். இந்திரா தத் பகிர்ந்துள்ளது பாராட்டத்தக்கது.

ஒருபோதும் மறக்கவில்லை

தத் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும், மூத்தோர்களை மதிக்கும் நற்குணம், பணிவு, தொண்டு, இரக்கம் ஆகியவற்றை அவர் ஒருபோதும் மறக்கவில்லை. நமது நாகரிக மதிப்புகளுக்கு இந்தக் குணங்கள் முக்கியமானவை.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

தத் போன்றவர்களிடமிருந்து தற்போதைய தலைமுறையினர் உத்வேகம் பெற வேண்டும். விளையாட்டின் மீது தத் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் செலவிட வேண்டும்

விளையாட்டு, வெளிப்புற நடவடிக்கைகளில் இளம் தொழில்முனைவோர்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும். 1991-92ஆம் ஆண்டில் அரசுக்கும், தொழில் துறைக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதில் எஃப்.ஐ.சி.சி.ஐ. தலைவராக தத் முக்கியப் பங்காற்றினார்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், கேசிபி நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் வி.எல். இந்திரா தத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: Omicron Test: 'தமிழ்நாட்டில் மரபணு ஆய்வகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்'

Last Updated : Dec 27, 2021, 7:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details