நிவர் புயல் காரணமாக சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை வேளச்சேரி பகுதியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவந்தது.
இந்நிலையில், வேளச்சேரி ராம்நகர் பகுதியில் மழை நீரானது முழங்கால் அளவிற்குத் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க, பொதுமக்களை அவ்வழியாக அனுமதிக்காமல் வேறு வழியில் சுற்றிச் செல்லுமாறு வேளச்சேரி காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி அறிவுறுத்திவருகின்றனர்.