சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருந்ததாவது, 'சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும்.
அதற்கு ஏதுவாக தோட்டக்கலைத்துறையின் காய்கறித் தோட்டம் அமைக்க முதற்கட்டமாக ஒரு சத்துணவு மையத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம், 9 ஆயிரத்து 915 சத்துணவு மையங்களுக்கு சுமார் 4 கோடிய 96 லட்சம் ரூபாய் செலவில் காய்கறித் தோட்டங்கள் அமைக்கப்படும்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் நீங்கலாக, இதர 31 மாவட்டங்களிலுள்ள சத்துணவு மையங்களில், காய்கறித் தோட்டம் அமைக்க உரிய ஆணை வழங்கிட வேண்டும்.
அந்த காய்கறித் தோட்டம் அமைத்திட கல்வித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு முக்கியம் என்பதால், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்துணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை...!