தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மேட்டுப்பாளையம் சம்பவத்தில் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசப்படுகிறது' - வானதி ஸ்ரீனிவாசன்! - mettupalayam wall issue lattest news

சென்னை: மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வேண்டுமென்றே சாதிச்சாயம் பூசப்படுகிறது என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவர் பிரச்னை  மேட்டுப்பாளையம் சுவர் பாஜக கருத்து  வானதி ஸ்ரீனிவாசன்  mettupalayam wall issue  mettupalayam wall issue lattest news  vanathi srinivasan comment on mettupalayam wall issue
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசுப்படுகிறது - வானதி ஸ்ரீனிவாசன்

By

Published : Dec 4, 2019, 11:50 PM IST

சென்னை தி.நகர் கமலாலயத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், 'பாஜகவிற்கு மாநிலத்தலைவர் இல்லையென்றாலும், தேசிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மாநில தலைவர் இல்லை என்பதால், எந்தப் பணியும் பாதிக்கப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று திமுக மேலும் சிக்கல் ஆக்காமல் இருக்க வேண்டும். உள்ளாட்சித்தேர்தல் முடிந்தால் தான் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முழுமையான நிதியைப் பெறமுடியும்.

மேட்டுப்பாளையம் சம்பவத்தில் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசுப்படுகிறது - வானதி ஸ்ரீனிவாசன்

பாஜகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பலம் உள்ளது. தற்போது, எந்த எந்த தொகுதிகளில் யார் பலம்பெற்றவர்கள் யாருக்கு தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் எங்கே தீண்டாமை இருந்தது. தீண்டாமை என்கிற வார்த்தையை இவர்கள் எங்கிருந்து பிடித்தார்கள். எல்லா விசயங்களுக்கும் சிலரால் திட்டமிட்டு சாதிச்சாயம் பூசப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details