தமிழ்நாடு

tamil nadu

சத்துமாவு பொருள்களை ஏற்றிவந்த வேன் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

By

Published : May 5, 2021, 10:13 PM IST

சென்னை: வண்டலூர் புறவழி சாலையில் சத்துமாவு பொருள்களை ஏற்றிவந்த டெம்போ வேன் நிலைதடுமாறி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

van falls in twenty feel deep pit in chennai two injured
van falls in twenty feel deep pit in chennai two injured

சென்னை பூவிருந்தவல்லியில் இருந்து சத்துமாவு பொருள்களை டெம்போ வேன் ஒன்று ஏற்றிக்கொண்டு வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எருமையூர் அருகே வாகனம் வந்து கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்த 20 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

வேனை ஓட்டி வந்த மாரியப்பன், முருகவேல் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details