1969ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. இவரது உருவப்படத்தை சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 2) மாலை திறக்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு உறுதிசெய்து அதிகாரப்பூர்வமாக முன்னதாகவே அறிவித்தார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் விழாவில், கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கவுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.