சென்னை:ஐக்கிய அரபு அமீரக அதிபரின் மறைவுக்கு நாட்டில் இன்று (மே14) துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் இருந்து வந்தார். அவருக்கு வயது 74.
ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.