சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் பவித்ரா என்ற பெண் தனது வீட்டில் ஐந்து இளம்பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்திவந்தார். இங்கு, வாடிக்கையாளர்கள் போல் வந்த ஐந்து இளைஞர்களில் இருவர், வீட்டிற்குள் நுழைந்து மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பவித்ராவின் கழுத்தில் வைத்து அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றித் தரும்படி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து பயத்தில் தான் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை அவர் கழற்றிக்கொடுத்துள்ளார். மேலும், வீட்டிற்குள் ஏதும் பணம் இருக்கிறதா என்று அந்த நபர்கள் தேடிக்கொண்டிருக்கும்போது அவர்களைத் தள்ளிவிட்டு பவித்ரா வெளியே ஓடிவந்துள்ளார். இதைக்கண்டதும் வெளியே நின்று கொண்டிருந்த மூன்று பேர் தப்பியோடிவிட்டனர்.