தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு - Two year old child died

சென்னை பனையூர் ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

விபத்து
விபத்து

By

Published : Oct 15, 2021, 4:49 PM IST

சென்னை:பாலவாக்கத்தை சேர்ந்த தம்பதி சாது(26) - நந்தினி (23). இவர்களுக்கு தட்சன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உண்டு. இந்நிலையில், நேற்றிரவு (அக். 14) பனையூர் ஈசிஆர் சாலையில் மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனம் சாது ஓட்டி சென்ற வாகனம் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி குழந்தை உள்பட கணவன், மனைவி மூவரும் கீழே விழுந்தனர். இதில் சாது, அவரது மனைவி நந்தினி படுகாயமடைந்தனர். குழந்தை தட்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டது.

இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் இரு வீரர்கள் வீர மரணம்

ABOUT THE AUTHOR

...view details