தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழிப்பறியில் ஈடுபட்ட 2 திருநங்கைகள் கைது!

சென்னை: எம்ஜிஆர் நகர் பகுதியில் பெண்ணிடம் பணப்பையை பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By

Published : Oct 18, 2019, 1:45 PM IST

2 திருநங்கைகள் கைது

சென்னை, எம்ஜிஆர் நகர், அம்மன் கோயில் குறுக்குத் தெருவில் வசித்துவரும் தேன்மொழி என்பவர் கடந்த 9ஆம் தேதி அன்று மதியம் கே.கே.சாலை, எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் பூ வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த திருநங்கைகள் இருவர் தேன்மொழியிடம் பணம் கேட்டுள்ளனர்.

தேன்மொழி தனது பணப்பையில் இருந்து பணத்தை எடுத்தபோது திருநங்கைகள் இருவரும் தேன்மொழியின் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து தேன்மொழி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திருநங்கைள் சைலஜா, காவ்யா ஆகிய இருவர் தென்மொழியிடமிருந்து பணப்பையை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இருவரையும் எம்ஜிஆர் நகர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 5 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: வாக்காளர்களுக்கு வாரி பல லட்சம் ரூபாய்! மேலும் பரபரப்பான நாங்குநேரி!

ABOUT THE AUTHOR

...view details