சென்னை: கிழக்கு கடற்கரைச்சாலையின் அருகே ஈஞ்சம்பாக்கம் செல்லும் வழியாக இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவலருக்குத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் வீலிங் செய்தவாறு, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.