தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த 2 பேர் கைது - கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து புறநகரில் விற்பனை செய்த இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த 2 பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த 2 பேர் கைது

By

Published : Aug 25, 2022, 8:51 PM IST

Updated : Aug 25, 2022, 9:29 PM IST

சென்னை:சேலையூர், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் அந்தோணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க உத்தரவிடப்பட்டது.

அதன் பேரில் மதுவிலக்கு போலீசார் சிட்லப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்களை கண்டறிந்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வருவதையறிந்த போலீசார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்து 2 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், கஞ்சாவையும் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் இருவரும் குரோம்பேட்டையை சேர்ந்த ஹரிஷ்(26), ராஜேஷ்(25), என்பது தெரியவந்தது. இதையடுத்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:சொத்துக்காக எலி மருந்து கொடுத்து தாயைக் கொன்ற இளம்பெண்

Last Updated : Aug 25, 2022, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details