தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சா கடத்தல், இருவர் கைது - சென்னையில் கஞ்சா கடத்திய இருவர் கைது

சென்னை: கார் மூலம் விசாகபட்டினத்திலிருந்து 155 கிலோ கஞ்சாவை கடத்திவந்த இருவரை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

two held for selling Ganja from visakhapatnam
two held for selling Ganja from visakhapatnam

By

Published : Jan 21, 2021, 11:01 PM IST

விசாகப்பட்டினம் பகுதியிலிருந்து சென்னை வழியாக வேதாரண்யம் பகுதிக்கு கஞ்சா கடத்தி செல்வதாக போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் டி.எஸ். பி ரியாஸ் தலைமையிலான போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மாதவரம் ரவுண்டானாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் 155 கிலோ கஞ்சா கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த நல்லபெருமாள் (40), உடனிருந்த துரைராஜ் என இருவரை கைது செய்தனர். விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி சென்னை வழியாக உசிலம்பட்டிக்கு கொண்டு சென்று சப்ளை செய்து வருவது தெரியவந்தது.

இதேபோன்று தொடர்ந்து பல முறை கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. பின்னர் கார், 155 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உசிலம்பட்டியில் யாரிடம் கஞ்சா விற்கிறார்கள் என்பது குறித்து இருவரிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க... கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details