தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை

By

Published : Jan 17, 2023, 1:18 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை

சென்னை:தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. குறிப்பாக நீலகிரியின் குன்னூர், திண்டுக்கல்லின் கொடைக்கானல் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுவருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றும் (ஜனவரி 17) நாளையும் (ஜனவரி 18) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

19.01.2023 முதல் 21.01.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் அனல் பறக்கும் க்ளிக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details