தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளத்தனமாக மது விற்பனை குரோம்பேட்டையில் இருவர் கைது! - கள்ள மது விற்பனை இருவர் கைது

சென்னை: குரோம்பேட்டையில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை  குரோம்பேட்டையில் இருவர் கைது!
கள்ளத்தனமாக மது விற்பனை குரோம்பேட்டையில் இருவர் கைது!

By

Published : Feb 23, 2021, 3:59 PM IST

குரோம்பேட்டை மேம்பாலம் கீழே அமைந்துள்ள இரு மதுக்கடைகளிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26), சங்கர் (36) இருவரும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை உறுதி செய்து, இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் அங்கு இயங்கும் பார்களில் பணிபுரிபவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திடீரென வெடித்த ஜெல்லட்டின்... சிதறிய உடல்கள் - கர்நாடகாவில் பயங்கரம்!

ABOUT THE AUTHOR

...view details