தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் - gold seized at chennai airport

சென்னை: துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

twenty lakh worth gold seized at chennai airport
twenty lakh worth gold seized at chennai airport

By

Published : May 9, 2021, 7:37 PM IST

துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று இன்று (மே. 9) சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது தஞ்சாவூரைச் சோ்ந்த லியாக்கத் அலி (26) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

இதையடுத்து அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 451 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 லட்சம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து பயணி லியாக்கத் அலியை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனாவால் இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details