தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விச் செலவிணங்களை அரசே ஏற்கும் வண்ணம், குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயம் செய்து அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில், அரசு வழங்கி வந்த கல்விக் கட்டணத்தை பாதிக்கும் கீழாக குறைத்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் புதிய கட்டணம் தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளார்.