சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் தியாகராய நகர் வட்டார பகுதிகளுக்கு அதிகளவில் வருகை தர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கிலும் வருகிற அக்டோபர் 8 முதல் 24 ஆம் தேதி வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும் வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டைச் சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படுகிறது.