சுற்றுலா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கிலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நகர சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாட்டு பொங்கல் (ஜனவரி 16) அன்று மட்டும் 10 ரூபாய்க்கு சென்னை நகரை சுற்றலாம். நகரின் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கிக் கொள்ளலாம்.
சுற்றுலாத் துறை வளாகத்திலிருந்து (தீவுத் திடல்) மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையில் இந்த சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.