தமிழ்நாடு

tamil nadu

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 20, 2020, 11:12 AM IST

Published : Jun 20, 2020, 11:12 AM IST

top-10news-at-11am
top-10news-at-11am

'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது' - சுதேஷ் வர்மா

ஹைதராபாத்: இந்தியா- சீனா இடையே உச்சக்கட்ட அமைதியின்மை நிலவும் நிலையில், சீனாவுக்கு எதிரான வர்த்தகப்போரை நாம் தொடங்க முடியுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா பதிலளித்தார்.

மணிப்பூர்: காங்கிரசை வீழ்த்திய பாஜக, குஷியில் முதலமைச்சர்!

இம்பால்: மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காங்கிரஸ்எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் கூறியுள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பிலிருந்த நபர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்?

வாஷிங்டன்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட தொழிலதிபர், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவலர்களுக்கு உதவிட கரோனா கட்டுப்பாட்டு அறை தொடக்கம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

'நாட்டுக்காக ஓர் தாய்ப் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம்' - மு.க. ஸ்டாலின்

சென்னை: பல்வேறு அரசியல் இயக்கங்கள் வெவ்வேறு கருத்தியல்களுடன் இயங்கினாலும் நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாய்ப் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விருது வென்ற விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம்!

விருதுநகர்: மத்திய அரசின் காயகல்ப விருதை 99.3 மதிப்பெண்கள் பெற்று மல்லாங்கிணறு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் வென்றது.

ட்விட்டர், திரைப்படங்களில் மரணத்தை கணித்த சுஷாந்த்!

சுஷாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள், நடித்த படங்கள் அவரது மரணத்தை முன்னரே அவர் கணித்ததை குறித்து ஆராய்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

நேபாள-சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை!

காத்மாண்டு: நேபாளம், சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கோவிட்-19க்கு எதிராகச் செயலாற்றும் நானோ ஸ்பாஞ்சஸ்!

சேக்ரமெண்டோ: கோவிட்-19 வைரசை எதிர்கொள்ள அதிநவீன உயிரியல் தொழில்நுட்பமான ’நானோ ஸ்பாஞ்சஸ்’ ஆய்வில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 பரிசோதனை: ஏற்புடைய விலையை நிர்ணயம் செய்யுங்கள்: நீதிமன்றம் காட்டம்!

கரோனா பரிசோதனைக்கான ஏற்புடையக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details