தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு மணி செய்தி சுருக்கும் TOP 10 NEWS @ 1 PM - ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS @ 1 PM
TOP 10 NEWS @ 1 PM

By

Published : Jun 3, 2021, 1:01 PM IST

1.செங்கல்பட்டு ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி: கைவிரித்த உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2.'போராளியின் வழியில் வெற்றிப் பயணம்' - கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

3.'யூ-டியூப் சாராயம்' - குக்கருடன் தந்தை மகனை தூக்கிய போலீஸ்

யூ-டியூப்-பில் பார்த்து வீட்டில் கள்ளச்சாராயத்தை குக்கரில் காய்ச்சிய தந்தை மற்றும் மகனை, காவல் துறையினர் கைது செய்தனர்.

4.விஜயவாடாவிலிருந்து சென்னை வந்ததடைந்த மருத்துவ உபகரணங்கள்!

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வெண்டிலேட்டா்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தடைந்தது.

5.தினசரி கரோனா பாதிப்பில் முதலிடத்தில் நீடிக்கும் தமிழ்நாடு

நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் ஒருநாள் கரோனா பாதிப்பு அதிகளவில் பதிவாகிறது.


6.'அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன'

திமுக மகளிரணிச் செயலாளரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, தனது தந்தையின் பிறந்தநாளில் அவரை நெகிழ்ச்சியுற நினைவுகூர்ந்திருக்கிறார்.


7.பயோலாஜிக்கல் இ தடுப்பூசி - 30 கோடி டோஸ் முன்பதிவு

பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடமிருந்து கரோனா தடுப்பூசியின் 30 கோடி டோஸ்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

8.யார் இந்த சிடி மணி - என்கவுன்டர்தான் காவல் துறையினரின் திட்டமா?

சிடி மணியை என்கவுன்டர் செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலிடத்து உத்தரவு கிடைக்காததால் நாடகமாடி அவரைக் கைதுசெய்துள்ளனர் என்று சிடி மணியின் வழக்கறிஞர் கூறுகிறார்.


9.'அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்?' - மூடநம்பிக்கைகளைத் தகர்த்த பகுத்தறிவு பாதுகாவலன்

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப்பை உடைத்து ‘பராசக்தி’ என்ற காவியத்தை தந்த காவிய நாயகன்கருணாநிதி பிறந்தநாள் இன்று (ஜூன் 3). ‘பராசக்தி’ படத்தின் மூலம் அவர் என்ன செய்தார், அந்தப் படத்தை ஏன் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர் என்பது பற்றிய சிறப்புத் தொகுப்பு.

10.அரசுப்பள்ளியில் கணினி திருட்டு

புதுச்சேரி அரசு ஆரம்ப பள்ளியில் கணினி, பிரிண்டர், ஒலிபெருக்கி உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details