தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am

By

Published : Jul 3, 2020, 9:03 AM IST

உத்தரப் பிரதேசத்தில் எட்டு காவலர்கள் சுட்டுக்கொலை

கான்பூர்: குற்றவாளிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எட்டு காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

'கரோனா பரிசோதனைக்குத் தனியார் மருத்துவர்களும் பரிந்துரைக்கலாம்' - மத்திய சுகாதாரத் துறை!

டெல்லி: கரோனா பரிசோதனை பரிந்துரையை அரசு மருத்துவர்கள் மட்டுமே செய்து வந்த நிலையில், தற்போது தனியார் மருத்துவர்களும் பரிந்துரைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கோவிட்-19 கண்டறிதல் சோதனை : லேப் டெக்னீஷியன்கள் தொடுத்த வழக்கு முடித்து வைப்பு!

சென்னை : கரோனா கண்டறிதல் சோதனைக்கான மாதிரிகளை எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

இந்திய - சீன எல்லைப் பிரச்னை: சீனப் பொருட்கள் இறக்குமதியில் கடும் சரிவு!

சீன நாட்டிலிருந்து இறக்குமதி குறைந்து வருவதால், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 2019-20ஆம் ஆண்டில் 48.66 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

'விசாரணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரச் சட்டம் பிறப்பியுங்கள்' - அமித் ஷாவுக்குக் கனிமொழி கடிதம்

சென்னை: விசாரணை மரணங்களுக்கும் காவல் துறையினரின் சித்ரவதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஒரு அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய, ரஷ்ய உறவு மேம்படுமா?

இரு நாட்டு உறவை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் காலமானார்!

மூன்று முறை தேசிய விருது பெற்ற பழம்பெரும் நடன இயக்குனரான சரோஜ் கான் இன்று (ஜுலை 3) காலமானார்.

ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடைபெறும் - பிசிசிஐ

நாட்டில் நிலவி வரும் கரோனா சூழலால் ஐபிஎல் டி20 தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரி விதித்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது சரியல்ல!

பெட்ரோல்-டீசலின் விலை பல குறிப்பிட்ட காரணிகளைப் பொறுத்தது. இந்த விலை தினமும் காலை 6 மணிக்கு நிர்ணயிக்கப்படுகிறது. மாறும் எரிபொருள் விலை முறையில் எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் அது ஒவ்வொரு நாளும் மாறுகிறது.

உள்ளிருந்து எழும் எதிர்ப்பு, கடின சூழலில் நேபாள பிரதமர்!

டெல்லி: ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவிலுள்ள (என்.சி.பி) அதிகமான உறுப்பினர்கள் அந்நாட்டின் பிரதமர் கே.பி. ஒலியின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ள நிலையில், இனிவரும் நாள்களில் அவர் தனது பதவிக்கு அதிக சவால்களை எதிர்கொள்ளப் போகிறார்.

ABOUT THE AUTHOR

...view details