தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - top 10 news etv tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-9am
top-10-news-at-9am

By

Published : Jun 18, 2020, 9:09 AM IST

21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம்

ராமநாதபுரம்: லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரான கடுக்கலூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தளர்வு: தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: முழு ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தளர்வு குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

நெதர்லாந்திலிருந்து போதை மாத்திரைகளை வரவழைத்த கல்லூரி மாணவனுக்குச் சிறை!

சென்னை: நெதர்லாந்து நாட்டிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை வரவழைத்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவனை சுங்கத் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

புல்வாமாவில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினரான இந்தியா!

டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினர் ஆனது.

'சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சர்ஜா எனது அன்பிற்குரிய நண்பர்கள்'- நடிகர் சிம்பு

நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சர்ஜா, சேதுராமன் ஆகியோரின் எதிர்பாராத இறப்புத் தன்னை மிகவும் பாதித்துள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ரஹானேவை கலாய்த்த தவான்!

ரோகித் சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரஹானேவின் பதிவிற்கு, தவான் அடித்த கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சந்தை ஒரு பார்வை: சிவப்பில் முடிந்த பங்குச்சந்தை, தங்கம் சற்று மீட்சி!

ஹைதராபாத்: இந்திய-சீன எல்லைப் பிரச்னை உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தத்தமது வர்த்தகங்களை முடித்துள்ளன.

சீனா- இந்தியா நிலவரம்: உற்று நோக்கும் அமெரிக்கா!

வாஷிங்டன்: இந்தியா சீனா எல்லை விவகாரத்தை கூர்ந்து கவனிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின்போது நிகழும் பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம் நியாயமானதா? - சிறப்புக் கட்டுரை

கச்சா எண்ணெயின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளபோதும், கடந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இது சாமானிய மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details