தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top Ten 10 @ 9 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 1, 2021, 9:13 PM IST

1. தமிழ்நாட்டில் மேலும் 1509 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் மேலும் கரோனா தொற்றினால் புதிதாக ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

2. விநாயகர் சிலைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 177 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலைவாணர் அரங்கம் முன்பு, விநாயகர் சிலைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 177 பேர் மீது திருவல்லிக்கேணி காவல் துறை 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது.

3. விரைவில் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்!

உள்கட்டமைப்பு பணிகள் முடிந்தவுடன் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

4. 'ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம் வேண்டும்'- கொளத்தூர் மணி

சாதி மறுப்பு திருமணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆணவ படுகொலைகளை தடுக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார்.

5. சொத்துக்குவிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வாதம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வருமானத்திற்கு அதிகமாக 10 விழுக்காட்டிற்கும் குறைவாக சொத்து சேர்த்து இருப்பதால், அவர் மீதான வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

6. அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்; எங்கள் இலக்கை நாங்கள் அடைவோம்: விஜய பிரபாகரன்

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரண காரியம் தான் என்று கூறியுள்ள தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன், எங்கள் இலக்கை நாங்கள் மிக விரைவில் அடைவோம் என்று தெரிவித்துள்ளார்.

7. பல்கலை., இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - அண்ணாமலை

பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட்டு, தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

8. மன அழுத்தம் - நாக்கை அறுத்துக்கொண்ட தொழிலாளி

மனஅழுத்தத்தில் கத்தியால் தனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிய கட்டடத் தொழிலாளியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9. அறப்போர் இயக்கம் சேவை உரிமைச் சட்ட மசோதா சொல்வது என்ன?

அறப்போர் இயக்கத்தின் சேவை உரிமைச் சட்ட மசோதா சொல்வது என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

10. மதுரையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள்!

மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details