தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 pm
Top 10 news @ 9 pm

By

Published : Sep 23, 2020, 9:00 PM IST

சமூக வலைதள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் கோரிய மனு - அக்.14 விசாரணை

சென்னை : சமூக வலைதள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் பிட்காயின் மோசடியில் சிக்கிய நைஜீரிய கும்பல் - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

சென்னை: பிட்காயின்களை வைத்து மோசடி செய்து பலரை ஏமாற்றிய நைஜீரிய கும்பலை அடையாறு சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பிகார் தேர்தல்: பாஜக கூட்டணியில் பிளவு? தனித்து களமிறங்கும் பாஸ்வானின் கட்சி?

வரப்போகும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி பாஜக கூட்டணிலிருந்து விலகி தனித்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோரிடமிருந்து மனைவியை மீட்டுத் தரக்கோரி காதல் கணவன் புகார்!

மதுரை: திருமங்கலம் அருகே விருந்திற்காக அழைத்துச் சென்ற பெற்றோரிடமிருந்து காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு: முக்கியத் தடயங்களை ஆய்வுசெய்த சிபிஐ

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அலுவலர்கள் முக்கியமான தடயங்களை ஆய்வு செய்தனர்.

நாமக்கல்லில் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மினி லாக்டவுன்...!

நாமக்கல்: கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் 10 முதல் 12 நாள்களுக்கு மினி லாக்டவுன் அமல்படுத்தப்படும் என ஆட்சியர் மெகராஜ் தெரிவித்தார்.

தண்ணீர் தகராறு: பட்டியலின விவசாயி வெட்டிக்கொலை!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் தராததால், விவசாயி ஒருவர், பட்டியலின விவசாயியை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பயங்கர சத்தம், நில அதிர்வு... அச்சத்தில் உறைந்த காஷ்மீர் மக்கள்!

காஷ்மீர்: நேற்று இரவு திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தம், நில அதிர்வால் காஷ்மீர் மக்கள் அச்சமடைந்தனர்.

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சு!

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2020: கேகேஆர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த புர்ஜ் கலிஃபா!

உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அந்த அணியின் இலச்சினை, வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய எல்.இ.டி விளக்குகளால் கட்டடம் ஒளிர செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details