தமிழ்நாடு

tamil nadu

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

By

Published : Jul 2, 2020, 7:02 PM IST

Updated : Jul 2, 2020, 8:11 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 1 news @ 7PM
Top 1 news @ 7PM

டெல்லி டூ லக்னோ : யோகியை வீழ்த்தும் தலைவியாக மாறுகிறாரா பிரியங்கா?

லக்னோ : மத்திய அரசால் டெல்லியிருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேசத்திற்கு இடம் பெயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுழலாத ராட்டினத்தால் சுருண்ட ராட்டின தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

துருவேறிக் கொண்டிருக்கும் ராட்டினப் பாகங்களைப் போலவே அதை நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் செல்லரித்துக் கொண்டிருக்கிறது. அரசு ஆதரவுக் கரம் நீட்டினால் மட்டுமே ராட்டின தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும்.

நெய்வேலி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க அமித்ஷாவிடம் கோரிக்கை

சென்னை: என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு ரிசர்வ் போலீஸில் இட ஒதுக்கீடு கோரும் சங்கமா இயக்கம்!

பெங்களூரு : கர்நாடக சிறப்பு ரிசர்வ் போலீஸ் படைகளில் தகுதி வாய்ந்த திருநங்கைகள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டுமென கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக செலுத்த தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை: கல்விக் கட்டணத்தில் 70 விழுக்காடு கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்ற நான்கு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிகார அத்துமீறல்: லாக்கப் டார்ச்சரால் வாழ்க்கையை இழந்து நீதிக்காக காத்திருக்கும் யேசுதாஸ்

காவலர்கள் சித்ரவதையால் லாக்கப்பில் உயிரிழந்த அப்பாவிகள் ஒருபுறம் என்றால், போலி வழக்கு ஜோடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதால் வாழ்கையை இழந்தவர்கள் மறுபுறம். காவல் துறையின் அதிகார அத்துமீறலுக்கு ஆளாகி வாழும் சாட்சியாய் நிற்கிறார் யேசுதாஸ்.

இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: மின் கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியல் தலையீடுகள் எங்களுக்குத் தேவையில்லை - சுஷாந்த் குடும்பத்தினர்

மும்பை: நடிகர் சேகர் சுமன், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் பிகார் முன்னாள் துணை முதலமைச்சருடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தது ஒரு அரசியல் நாடகம் என்று நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் விமர்சித்துள்ளனர்.

Last Updated : Jul 2, 2020, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details