தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 20, 2020, 2:58 PM IST

800 ஆண்டுகளுக்கு பின் நிகழும் 'வியாழன், சனி' கோள்களின் பேரிணைவு!

நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள்களான 'வியாழன், சனி' இரண்டும், 800 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது போல தோன்றப்போகின்றன. இந்த பேரிணைவு நிகழ்வு நாளை(டிச.21) சூரியன் மறையும் நேரத்தில் நிகழ உள்ளது.

நண்பர் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் : முத்தரசன்

சேலம்: நண்பர் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

குழந்தைபோல் குதூகலத்துடன் பலூன்கள் வெடித்து விளையாடிய அமைச்சர்!

விருதுநகர் : மினி கிளினிக் திறப்பு விழாவிற்குச் சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரிப்பனை வெட்டாமல் கத்திரிக்கோலால் குழந்தையைப் போல் பலூனை குத்தி வெடித்து விளையாடியது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் : வைரல் காணொலி

சென்னை : மதுரவாயலில் தான் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல், உணவக ஊழியர்களிடம் குடிபோதையில் தகராறு செய்த காவல் உதவி ஆய்வாளரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரக்யா சிங் தாக்கூர் மருத்துவமனையில் அனுமதி!

போபால்: பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு கோடியைத் தாண்டிய கரோனா பாதிப்பு

டெல்லி : இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 624 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனை : தன்னார்வலர்கள் கிடைக்காமல் திண்டாடும் எய்ம்ஸ்!

டெல்லி : கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளுக்கு ஆயிரத்து 500 தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை 200 பேர் மட்டுமே முன்வந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வேதனைத் தெரிவித்துள்ளது

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு - 8 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தாக்குதலில் சிக்கி 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் சர்மா ஒலி பரிந்துரை!

காத்மாண்டு : நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி பரிந்துரை செய்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிம்பு நடிப்பில் 'போடா போடி-2', தயாரிப்பாளர் சுவாரஸ்ய அறிவிப்பு

சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details