தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm

By

Published : Oct 16, 2020, 3:13 PM IST

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட மோடி!

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை இன்று வெளியிட்டார்.

'கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது' - கண் கலங்கிய நீதிபதி கிருபாகரன்!

கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும் வேதனைகளும் அளவிட முடியாதது என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

கிராமசபைக் கூட்டம் நடத்தக்கோரிய வழக்கு - நவம்பர் 10ஆம் தேதி ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கினை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

'உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது' - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா, இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது - ராகுல் காந்தி

இந்த ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 10.3 விழுக்காடு குறையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ள நிலையில், கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் சேவை முடக்கம்?

ட்விட்டர் சேவை ஒரு மணி நேரமாக முடங்கியதாகப் பயனாளர்கள் புகார் தெரிவித்த நிலையில், அது சரி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி எம்.பி. ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி தேனி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புகைப்பிடிக்க கட்டாயப்படுத்திய ரூம்மேட் - மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை!

ரூம்மேட் புகைபிடிக்க கட்டாயப்படுத்தியதால் 18 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆம்பூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.38.5 லட்சம் மோசடி; இருவர் கைது!

ஆம்பூர் அருகே பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.38.5 லட்சம் மோசடி செய்ததாக இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

பிக் பாஸ் 4 - கேப்ரில்லாவை முதுகில் சுமந்த சுரேஷ்!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இன்றைக்கான எபிசோட்டில் கேப்ரில்லாவை, சுரேஷ் முதுகில் சுமந்து தனது ஆதரவை வெளிக்காட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details