சென்னை : சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிக்குக் கொண்டு செல்வதற்கு மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள, 15 அமரர் ஊர்தி வாகனங்களின் சேவையைப் பெற 155377 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த 15 வாகனங்களும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் மாநகராட்சி சார்பில் இன்று வழங்கப்பட்டது.