சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகநாதன் பாண்டி பங்குபெறுகிறார்.
கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் காவலர் ஒருவர் தேர்வாகி இருப்பதால், அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, நாகநாதன் பாண்டியின் குடும்பத்தினரை வரவழைத்து பாராட்டுகளையும், சிறப்பு உதவிகளையும் வழங்கினார்.