தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2021, 9:32 AM IST

ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட் 24) கடைசி நாள், அதனால் உடனே விண்ணப்பிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

பொறியியல்
பொறியியல்

சென்னை: பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 897 மாணவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 812 பேர் தங்கள் ஆவணங்களை முழுமையாகச் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களையும், புதிதாகச் சேர விரும்பும் மாணவர்கள் அனைத்துச் சான்றிதழ்களையும் பதிவேற்ற இன்றே கடைசி நாளாகும். பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26 முதல் இன்றுவரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

இந்தநிலையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

பொறியியல் படிப்பில் சேர ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை வரையில் பொறியியல் கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 896 மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். மேலும், கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 732 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 812 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கலந்தாய்வு விவரம்
மாணவர்களுக்கான சமவாய்ப்பு (ரேண்டம்) எண் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொறியியல் கட்ஆப்

பொறியியல் கட்ஆப்

மேலும் 2020-21ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்களும் உயர்ந்துள்ளன.

இதையும் படிங்க: 'இளைஞர்களின் கைகளில் கிராமங்களின் எதிர்காலம்' - இளங்கோ ரங்கசாமி

ABOUT THE AUTHOR

...view details