தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2020, 9:21 PM IST

ETV Bharat / state

2018 டிஎன்பிஎஸ்சி தேர்விலும் முறைகேடு முயற்சி: விசாரணையில் வெளியான தகவல்

2018 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விலும் ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tnpsc update
Tnpsc update

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2019ஆம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது தொடர்பாக, சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இது தொடர்பாகத் தேர்வு முறைகேட்டிற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் உள்பட பலரை கைதுசெய்துள்ளனர்.

இதனிடையே, 2018ஆம் ஆண்டும் குரூப் 4 தேர்விலும் ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரும் முறைகேடு செய்ய முயற்சிசெய்ததாக, விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பாதுகாப்புக்குச் சென்ற காவலர் அதிக கவனத்துடன் செயல்பட்டதாலும் அவரை விலைக்கு வாங்க இயலாததாலும் அம்முயற்சியில் தோல்வியடைந்ததாகத் தெரியவந்துள்ளது.

ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரும் 2018ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ய, 40-க்கும் மேற்பட்டோரிடம் ஏழு முதல் ஒன்பது லட்சம் வரை பணத்தைப் பெற்றுள்ளனர். பின்னர் முறைகேடு செய்ய இயலாததால், பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தொலைவு அதிகம் என்பதாலேயே ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை இவர்கள் தேர்வுசெய்ய காரணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தனியார் விடுதியை அடையாளம் காட்டிய ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details