தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் குரூப் -1 பிரிவில் காலியாக உள்ள 181 பணியிடங்களுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 1,68,549 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், முதல்நிலைத் தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 9,850 பேருக்கு முதன்மைத் தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் சுதன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப்- I முதன்மைத்தேர்வு வரும் ஜூலை 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் நடைபெறுகிறது. முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.