TNPSC Exams: சென்னை, தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் அதன் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வரும் 8ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கான பணிக்கான தேர்வு 9ஆம் தேதியும்,