தமிழ்நாடு

tamil nadu

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - பெண்கள் உட்பட மூன்று பேர் கைது

By

Published : Feb 13, 2020, 5:25 PM IST

Updated : Feb 13, 2020, 5:48 PM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் 7 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

TNPSC arrests three more, including two women
TNPSC arrests three more, including two women

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு, தமிழ்நாட்டில் பூதகரமாக உள்ள நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தராஜ், வெங்கடரமணன், 3 காவலர்கள், 23 அரசு ஊழியர்கள், 5 தேர்வர்கள் மற்றும் 6 ஓட்டுநர்கள் என மொத்தம் 42 பேரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டுப் புகாரில், மேலும் இரண்டு பெண் உட்பட 3 பேரினைக் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து இதுவரை மொத்தம் 45 பேரினை சிபிசிஐடியினர் கைது செய்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - பெண்கள் உட்பட மூன்று பேர் கைது

இதற்கிடையே இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாருக்குச் சொந்தமான பல்வேறுப் பகுதிகளில், சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது அவர் பயன்படுத்தி வந்த வங்கிக் கணக்குகளில் இருந்த 7 லட்சம் ரூபாய் மற்றும் 2 கார்களை சிபிசிஐடி காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க :மாற்றுத் திறனாளிகள் நலப்பணிகள் - அமைச்சர் சரோஜா உறுதி!

Last Updated : Feb 13, 2020, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details